search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் அலை"

    • கடலில் தத்தளித்தவர்களின் அபாய குரலை கேட்டு மீனவர்கள் திரும்பி பார்த்தனர்.
    • பலத்த போராட்டத்திற்கு பிறகு 5 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள பொட்டல்குழி பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி (வயது 48). இவரது மனைவி சீமா (47).

    இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் விஜயா (45). இவரது மகள்கள் ஆஷா (22), ஆஷிகா (17). இவர்கள் அனைவருக்கும் குடும்ப கோவில் ஒன்று உள்ளது. அங்கு நடைபெறும் திருவிழாவுக்கு மண்டைக்காடு கடலில் இருந்து புனித நீர் எடுத்துச்செல்வது வழக்கம்.

    தற்போது கோவில் திருவிழா நடைபெற்று வருவதால், இன்று காலை வைகுண்டமணி அவரது மனைவி மற்றும் விஜயா குடும்பத்தினர் புனித நீர் எடுப்பதற்காக மண்டைக் காடு சென்றனர். அவர்கள் முதலில் கடலில் இறங்கி கால் நனைத்தனர்.

    அப்போது ராட்சத அலை எழுந்து வந்தது. இதனை அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் 5 பேரையும் கடல் அலை வாரி இழுத்துச்சென்றது.

    வைகுண்டமணி, அவரது மனைவி சீமா, விஜயா, அவரது மகள்கள் ஆஷா மற்றும் ஆஷிகா ஆகியோர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டபடியே தண்ணீரில் மூழ்கினர். அப்போது காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் மீனவர்கள் கரை திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அவர்கள், கடலில் தத்தளித்தவர்களின் அபாய குரலை கேட்டு திரும்பி பார்த்தனர். உடனடியாக கடலில் குதித்து 5 பேரையும் காப்பாற்ற முயன்றனர். பலத்த போராட்டத்திற்கு பிறகு அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் 5 பேரும் அதற்குள் மயங்கிவிட்டனர். இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கும், குளச்சல் கடலோர போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். உடனடியாக மயக்கத்தில் இருந்த 5 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பினர்.

    சரியான நேரத்தில் 5 பேரையும் கடலில் குதித்து காப்பாற்றிய மீனவர்களை பலரும் பாராட்டினர். மீனவர்கள் கவனிக்காமல் இருந்திருந்தால் கடல் அலையில் 5 பேரும் மூழ்கி பலியாகி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பக்தர்களின் பாதுகாப்புக்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்
    • அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட் டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர் கள் வந்து பொங்க லிட்டு அம்மனை வழிபடுவார்கள். பின்னர் அவர்கள் அங் குள்ள கடற்கரைக்கு சென்று கால் நனைப்பது வழக்கம்.

    நேற்று நாகர்கோவிலில் மருந்து கடை நடத்தி வரும் பிரமுகர் ஒருவர் தனது குடும்பத்தினர் மற்றும் கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுடன் மண்டைக்காடு கோவிலுக்கு வந்திருந்தார். அவர்கள் சாமி தரிசனம் முடிந்து கடற்கரைக்கு சென்றனர்.

    அங்கு கடலில் கால் நனைத்து கொண்டிருக்கும் போது திடீரென எழுந்த ராட்சத அலை 3 பெண்கள் மற்றும் 13 வயது சிறுவன் உள்பட 4 பேரை இழுத்து சென்றது. அலையில் சிக்கிய அவர்கள் உயிர் கடல் நீரில் தத்தளித்தபடி கூச்சலிட்ட னர். இதனை பார்த்த புதூர் மீனவர்கள் டேனியல், ஜாண்பால், சிலுவையடிமை, அந்தோணி மற்றும் சிலர் கடலில் குதித்து அனை வரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவில் சென்றனர். கோடைக்கால விடுமுறை என்பதால் மண்டைக்காடு கோவிலுக்கு தற்போது பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். அவர்கள் கடற்கரைக்கும் வந்து செல்கின்றனர். ஆனால் கடற்கரையில் போதுமான பாதுகாப்பு இல்லை. இங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பல வருடங் களாக மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத் தும் எந்த விதமான நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எனவே மீனவர்கள் மற்றும் பக்தர்களின் நலன் வேண்டி இங்கு தூண்டில் வளைவு அமைக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்.
    • கடலோர காவல் படையினர் மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த ஒத்தாளவெளி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ் (வயது18).

    இவர் கொள்ளிடம் அருகே அரசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. ஏ.சி. மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கூழையார் பகுதியில் உள்ள கடலில் தனது நண்பர்கள் 6 பேருடன் குளித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி மாயமானார்.

    இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கூழையார் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்து சென்று கடலில் மூழ்கி மாயமான மாணவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்

    • கடல் அலையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • 54 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், இந்தியாவில் 7 ஆயிரத்து 500 கி.மீ. நீள கடற்கரை உள்ளது.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டர் ஆழம் உள்ள இடத்தில், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிக்கான பரிசோதனை கடந்த நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் கடலில் வெற்றிகரமாக நடந்தது.

    இது ஐ.நா. மற்றும் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவிகரமாக இருக்கும். மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 2030-ல் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பருவநிலை மாற்ற இலக்குகளை எட்ட உதவும். கடல் அலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு துறைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி. கடல்சார் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் அப்துஸ் சமது வழிநடத்துவார்.

    இதுகுறித்து அப்துஸ் சமது கூறுகையில், "54 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், இந்தியாவில் 7 ஆயிரத்து 500 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. இதன் மூலம் நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்யமுடியும்" என்றார்.

    • மாணவ ர்களின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீனவர்கள் மாணவர்க ளின் உதவியுடன் உயிருக்கு போராடிய 3 மாணவிகளை மட்டும் மீட்டனர்.
    • சிவக்குமார் கடலின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்ட தால், அவர்க ளால் மீட்டக் முடியவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் கடலில் நேற்று குளித்த திருவாரூர் மருத்து வக்கல்லூரி மாண வர்களில், 4 பேர் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர், இதில் 3 பேர் மீட்கபப்ட்ட நிலையில், ஒருவர் மாயமாகி யுள்ளார். அவரை தீயணைப்பு வீரர்கள், போலீசார் தீவிர மாக தேடிவருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்ட படிப்பு படித்து வரும், சிவக்குமார் (வயது 20), கரோனா (20), அகிலாண்டேஸ்வரி (19), கனகலட்சுமி (19) உள்ளிட்ட 15 மாணவ-மாணவிகள் காரைக்காலுக்கு சுற்றுலா வந்தனர்.

    அவர்களில், சிவக்குமார், கரோனா, அகிலாண்டேஸ் வரி, கனகலட்சுமி உள்ளிட்ட 4 பேர், மாவட்ட நிர்வாக த்தின் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்துள்ளனர். அப்போது கடலில் வந்த ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனைக் கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டனர். மாணவ ர்களின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் சிலர் மாணவர்க ளின் உதவியுடன் உயிருக்கு போராடிய 3 மாணவிகளை மட்டும் மீட்டனர்.சிவக்குமார் கடலின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்ட தால், அவர்க ளால் மீட்டக் முடியவில்லை. தொடர்ந்து, காரைக்கால் நகர போலீசார், தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் நிலையத்திற்கு மாண வர்கள் தகவல் அளித்த னர். அதன்பேரில், கடலில் மாயமான பட்டு கோட்டை யைச்சேர்ந்த மாணவர் சிவக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர். காப்பாற்றப்பட்ட 3 மாணவி கள், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை கக்காக சேர்த்துள்ளனர்.

    இது குறித்து, காரைக் கால் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடல் சீற்றத்துடன் காணப்பட்டும், அப்பகுதியில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடி க்கையில் ஈடுபட்டாமல் இருந்ததாக கூறப்படு கிறது.கடலில் குளிக்க வேன்டாம் என மாவட்ட நிர்வாகம், போலீசார் சார்பில் எச்சரிக்கை போர்டு வைத்திருந்தாலும், கடல் சீற்றத்துடன் காணப்படும் நேரத்தில், போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வல ர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    விமானங்கள் மற்றும் கப்பல்கள் மாயமாகும் பெர்முடா முக்கோணத்தின் மர்மம் தொடர்பாக பிரிட்டன் கடலியல் ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மர்மத்தினை உடைக்கும் விதமாக உள்ளது. #BermudaTriangle
    லண்டன்:

    பெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் உள்ள மர்மமான கடல் பகுதி. பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் முக்கோணப்பகுதி தான் பெர்முடா முக்கோணம்.

    கடந்த 500 வருடங்களில் 50 கப்பல், 20 விமானம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் இந்த முக்கோணத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி  பெர்முடா முக்கோணத்திற்கு மேல் பறந்த அமெரிக்காவின் 5 போர் விமானங்கள் மாயமான பின்பு தான், பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல்கள் உலகம் முழுக்க பரவியது. 

    கடைசியாக கடந்த ஆண்டு 4 பேருடன் சிறிய ரக விமானம் ஒன்று காணாமல் போனது. அங்கே ஆண்டொன்றுக்குச் சராசரியாக 4 விமானங்கள் முதல் 25 க்கும் மேற்பட்ட படகுகள் வரை காணாமல் போகின்றன.  அவை ஏன் காணாமல் போகின்றன? எங்கே அவற்றை மீட்டெடுப்பது என்பது குறித்து இதுவரையிலும் கண்டறியப்படாமலே இருந்து வந்தது. 

    பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தாண்டி வான்வெளிகளையும், வேற்று கிரகங்களையும் அலசி பார்க்க முடிந்த நமது அதிநவீன அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியால், பூமியில் சுமார் 7,00,000 சதுர கிலோமீட்டர்களுக்கு மட்டுமே பரந்து விரிந்து கிடக்கும் கடல்பகுதியான பெர்முடா முக்கோணத்தை பற்றிய சரியான தெளிவை பெற முடியாமல் இருந்து வந்தது.



    விஞ்ஞானிகள் ஒரு பக்கம் மண்டையை உடைத்து யோசித்து கொண்டிருந்தாலும், அங்கு மர்ம சக்தி உள்ளது அதனாலே, கப்பல் மற்றும் விமானங்கள் காணாமல் போகின்றன என கதை கட்டியவர்களும் உண்டு. அறிவியலுக்கு விஞ்சியது உலகில் ஒன்றும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பிரிட்டனை சேர்ந்த கடலியலாளர்கள் இந்த மர்மத்தை உடைத்துள்ளனர். 

    டாக்டர் சைமன் போக்ஸால் என்பவரது தலைமையிலான குழு பெர்முடா முக்கோணம் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பெர்முடா முக்கோண கடல் பகுதியில் மற்ற கடல் பகுதிகளை விட மிகப்பெரிய அலைகள் எழுவதே கப்பல்கள் மூழ்குவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 100 அடி (30 மீட்டர்) உயர்த்துக்கு இயல்பாகவே அந்த பகுதியில் அலைகள் எழும்புகின்றன. 100 அடி உயரம் என்றால் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அந்த உயரத்தை எட்டும் வண்ணம் ராட்சச அலைகள் வெகு சாதாரணமாக முக்கோணப்பகுதியில் அடிக்கும். 

    மற்ற கடல் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட சீற்றத்தின் போது கூட இந்த அளவுக்கு அலைகள் உயர எழுந்தது இல்லை. ஆனால், பெர்முடா முக்கோண பகுதியில் எப்போதும் இதே உயரத்தில் அலை அடிக்கிறது. இந்த அலைகள் மத்தியில் கப்பல் மற்றும் படகுகள் செல்வது சாத்தியமே இல்லை. இதனால், அங்கு செல்லும் அனைத்துமே மூழ்குகின்றது.

    கடந்த 1995-ம் ஆண்டு முக்கோண பகுதியில் அலைகள் 18.5 மீட்டர் அளவுக்கு வீசியது சேட்டிலைட்டில் பதிவாகியிருந்தது குறிப்பிடதக்கது. மற்ற கடல் பகுதியை விட இந்த பகுதியில் கடல் நீரில் உள்ள அழுத்தம் அதிகமாக இருப்பது படகுகள் மற்றும் கப்பல்கள் உடைவதற்கு காரணமாக உள்ளது.



    12 மீட்டர் உயரத்தில் வீசக்கூடிய அலைகள் 8.5 பிஎஸ்ஐ அழுத்தத்தை கொண்டிருக்கும். இதனால், 21 பிஎஸ்ஐ அழுத்தத்தை தாங்கும் விதமாக படகு மற்றும் கப்பல்கள் கட்டப்படுகின்றன. ஆனால், பெர்முடா முக்கோணப்பகுதியில் உள்ள கடல் அலையின் அழுத்தம் 140 பிஎஸ்ஐ அளவாகும்.

    சராசாரி கடல் அலை அழுத்தத்தை விட பெர்முடா முக்கோணத்தில் 180 சதவிகிதம் அதிகமாக உள்ளது. இந்த அழுத்தமே கப்பல் மற்றும் படகுகள் நொறுங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. எவ்வளவு உறுதியாக கப்பல் கட்டினாலும் பெர்முடா முக்கோணத்தில் உள்ள அழுத்ததை தாங்க முடியாது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெர்முடா முக்கோண கடற்பரப்பில் நிலவும் சீதோஷன நிலை விமானங்கள் பறப்பதற்கு முற்றிலும் சரிவராத பகுதி எனவும் கூறப்பட்டுள்ளது.

    அலைகள் உயரமாக எழுவதற்கும் அழுத்தம் அதிகமாக இருப்பதற்கும் என்ன காரணம் என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தின் இயல்பு காரணமாகவே மேற்கண்டவை நடக்கிறது. அப்பகுதியில் நிலவும் வானிலை மாற்றங்களும், கடலுக்கடியிலான நில அமைப்புமே காரணம் எனவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
    நித்திரவிளையில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த மாணவர், செல்பி எடுக்கும்போது கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நித்திரவிளை:

    நித்திரவிளையை அடுத்த கிடாரக்குழியை சேர்ந்தவர் ஜாண்சன். இவரது மனைவி ஸ்டெல்லா கிரேஸ். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜாண்சனும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் மும்பையில் வசித்து வருகிறார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜாண்சன் இறந்துவிட்டார். அதன் பிறகு ஸ்டெல்லா கிரேஸ் குழந்தைகளுடன் மும்பையிலேயே வசித்து வந்தார். இவரின் மகன்கள் மும்பையில் படித்து வருகிறார்கள். தற்போது விடுமுறை விடப்பட்டதால் ஸ்டெல்லா கிரேஸ் 2 மகன்களுடன் சொந்த ஊரான கிடாரக்குழிக்கு வந்தார்.

    கடந்த வாரம் ஊருக்கு வந்த ஸ்டெல்லா கிரேசும், அவரது மகன்களும் நேற்று பொழியூர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடல் அலையை ரசித்தபடி இருந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் கடல் அலைகளில் அருகே நின்றபடி செல்போனில் செல்பி எடுத்தனர்.

    அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை ஸ்டெல்லா கிரேசையும், அவரது 2 மகன்களையும் இழுத்துச் சென்றது. அலையில் சிக்கிய மூவரும் அலறினர்.

    சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்ற மீனவர்கள் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் ஸ்டெல்லா கிரேசும் அவரது இளைய மகனும் மீட்கப்பட்டனர். மூத்த மகன் ஜோயல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இறந்து போன ஜோயலுக்கு 12 வயது ஆகிறது. அவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தபோது கடல் அலையில் சிக்கி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×